மவுண்ட் ஹிரா அகாடமியில் பேச்சுப் போட்டி
நெல்லிக்குப்பம் மவுண்ட் ஹிரா அகாடமி மாணவர்களின் கல்வி ஆர்வத்தை வளர்க்கும் விதமாக பாடத்திட்டம், இணைப் பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. பாடநூல்களைத் தாண்டி கற்றலே முழுமையான கல்வி என்பது அதன் குறிக்கோள். அதன் ஓர் அங்கமாக 2021 அக்டோபர் மாதம் நிகழ்வொன்றை அது ஏற்பாடு செய்திருந்தது. மனித குலம் அனைத்திற்கும் முழுமையான முன்மாதிரியாகத் திகழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை மாணவர்கள் படித்து உணர “நபிகளாரின் நற்குணங்கள்”, "நபிகளார் – ஒரு முழுமையான முன்மாதிரி” என்ற தலைப்புகளில் 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பேச்சுப் போட்டியை அது நடத்தியது.