அவ்லியாக்கள் அல்லாஹ் அல்லவே!
பிணியை அளிப்பவன் இறைவனே என்கிறார்கள் எம் முஸ்லிம்கள்; ஆனால், அதனைப் போக்கடிப்பவர்கள் அவ்லியா என்கிறார்கள், அவ்லியா பக்தர்கள். இது முழு அபத்தமாயில்லையா? அல்லாஹ் தன் திரு நபியைப் பார்த்து, அவருக்கு வரக்கூடிய நலனைப் பெருக்கிக் கொள்ளவோ, கெடுதலைத் தவிர்த்துக் கொள்ளவோ அவர்கட்கே சக்தி இல்லை என்று சொல்லச் சொல்லியுள்ளான்.