34. சென்னாப்ரா யுத்தம்
அத்தியாயம் - 34
அலெப்போவின் ரித்வான் விடுத்த அபயக்குரல் அப்பழுக்கற்ற வஞ்சகம். அச்சதியை அறியாமல் மவ்தூத் தலைமையிலான படை அலெப்போவை நெருங்கிய போது, இழுத்து மூடப்பட்ட நகரின் வாயில்கள்தாம் அவர்களை வரவேற்றன. உதவிக்கு விரைந்து வந்தவர்கள் வழிந்த வியர்வையைத் துடைத்து உதறிவிட்டு, திகைத்துப்போய் நின்றார்கள்.