கிலிஜ் அர்ஸலான் - I
துருக்கியின் அனடோலியாவில் தியார்பகிர் மாகாணத்தில் நிலத்தைத் தோண்டிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் இரண்டு மண்ணறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றைக் கண்டு அவர்களுக்கு எக்கச்சக்க சிலிர்ப்பு, பெருமிதம். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்ஸோனியன் நிறுவனத்தின் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.